இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
பல வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கர்ணனின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்த கவிதா, அதன் பிறகு தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து விட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். நீலி தொடரின் வில்லி அவர்தான்.
மனைவியை இழந்த கணவன் தன் மகள் அபியோடு வசிக்கிறார். மகளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்றில் இறந்த அம்மாவின் ஆவி இருக்கிறது. அது குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறது. கணவன் மறுமணம் செய்து கொள்ள.. மனைவியா வந்தவள் குழந்தை அபியை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை பொம்மைக்குள் இருக்கும் அம்மா ஆவி எப்படி காப்பாற்றுகிறது என்கிற கதை. இதில் கொடுமைக்கார சித்தி ரேகாவாக கவிதா நடிக்கிறார்.
"நான் முதன் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். அதுவும் குழந்தையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார சித்தியாக. நிச்சயம் எனது கேரக்டரை பெண்களுக்கு பிடிக்காது, திட்டி தீர்க்கப்போகிறார்கள். அதுதான் என் நடிப்பின் வெற்றி. தமிழ் சீரியலில்தான் அறிமுகமானேன். மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது" என்கிறார் கவிதா.