சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
டைரக்டர் பாரதிராஜா புதிதாக இயக்கியிருக்கும் தொலைக்காட்சி தொடருக்கு அப்பனும் ஆத்தாளும் என பெயரிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் 750 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது, `தெக்கத்திப்பொண்ணு தொடர். பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி பெற்ற இந்த தொடரைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்திலேயே அப்பனும் ஆத்தாளும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை ரமா நாயகியாக நடிக்கிறார். இவர் `என்னுயிர்த் தோழன் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தெக்கத்திப்பொண்ணு தொடர் போல, அப்பனும் ஆத்தாளும், கிராமத்து மனம் கமலும் தொடராக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் டைட்டில் பாடலுக்கு இசையமைக்க, நா.முத்துக்குமாரும் சிநேகனும் பாடல் எழுதியிருக்கிறார்கள்.