இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
டைரக்டர் பாரதிராஜா புதிதாக இயக்கியிருக்கும் தொலைக்காட்சி தொடருக்கு அப்பனும் ஆத்தாளும் என பெயரிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் 750 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது, `தெக்கத்திப்பொண்ணு தொடர். பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி பெற்ற இந்த தொடரைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்திலேயே அப்பனும் ஆத்தாளும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை ரமா நாயகியாக நடிக்கிறார். இவர் `என்னுயிர்த் தோழன் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தெக்கத்திப்பொண்ணு தொடர் போல, அப்பனும் ஆத்தாளும், கிராமத்து மனம் கமலும் தொடராக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் டைட்டில் பாடலுக்கு இசையமைக்க, நா.முத்துக்குமாரும் சிநேகனும் பாடல் எழுதியிருக்கிறார்கள்.