ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
டைரக்டர் பாரதிராஜா புதிதாக இயக்கியிருக்கும் தொலைக்காட்சி தொடருக்கு அப்பனும் ஆத்தாளும் என பெயரிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் 750 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது, `தெக்கத்திப்பொண்ணு தொடர். பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி பெற்ற இந்த தொடரைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்திலேயே அப்பனும் ஆத்தாளும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை ரமா நாயகியாக நடிக்கிறார். இவர் `என்னுயிர்த் தோழன் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தெக்கத்திப்பொண்ணு தொடர் போல, அப்பனும் ஆத்தாளும், கிராமத்து மனம் கமலும் தொடராக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் டைட்டில் பாடலுக்கு இசையமைக்க, நா.முத்துக்குமாரும் சிநேகனும் பாடல் எழுதியிருக்கிறார்கள்.