இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
டைரக்டர் பாரதிராஜா புதிதாக இயக்கியிருக்கும் தொலைக்காட்சி தொடருக்கு அப்பனும் ஆத்தாளும் என பெயரிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் 750 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது, `தெக்கத்திப்பொண்ணு தொடர். பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி பெற்ற இந்த தொடரைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்திலேயே அப்பனும் ஆத்தாளும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை ரமா நாயகியாக நடிக்கிறார். இவர் `என்னுயிர்த் தோழன் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தெக்கத்திப்பொண்ணு தொடர் போல, அப்பனும் ஆத்தாளும், கிராமத்து மனம் கமலும் தொடராக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் டைட்டில் பாடலுக்கு இசையமைக்க, நா.முத்துக்குமாரும் சிநேகனும் பாடல் எழுதியிருக்கிறார்கள்.