ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர் நிஷா கிருஷ்ணன். மகாபாரதம் தொடரின் இறுதி பகுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மகாபாரம் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலை அதே பெயரில் தொடராக உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் பின்னணயில் நடக்கிற கதை. பட்டு நெசவு தொழில், தங்க நகை தொழிலாளர்களின் பின்னணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. ராம்குமார் இயக்குகிறார். நிஷா கிருஷ்ணன் சமீபத்தில் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் தொடர் தலையணை பூக்கள்.




