‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
பாத்திமா பாபுவின் அடுத்த அவதாரமாக அவர், இப்போது நாடக இயக்குனராகியிருக்கிறார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்த பாத்திமா, இப்போது தாலியா தகரமா என்ற காமெடி நாடகத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்தும் வருகிறார். இந்த நாடகத்தை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியுள்ளார்.
அடுத்து பாத்திமா சின்னத்திரையில் காமெடி சீரியல் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார், சித்ராலயா ஸ்ரீராமுடன் சேர்ந்து இதற்காக கதையை உருவாக்கி வருகிறார். இதற்கு சரியான தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். சினிமா காமெடி நடிகர்களுடன் சின்னத்திரை காமெடி நடிகர்களும் நடிக்கும் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.