நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
பாத்திமா பாபுவின் அடுத்த அவதாரமாக அவர், இப்போது நாடக இயக்குனராகியிருக்கிறார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்த பாத்திமா, இப்போது தாலியா தகரமா என்ற காமெடி நாடகத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்தும் வருகிறார். இந்த நாடகத்தை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியுள்ளார்.
அடுத்து பாத்திமா சின்னத்திரையில் காமெடி சீரியல் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார், சித்ராலயா ஸ்ரீராமுடன் சேர்ந்து இதற்காக கதையை உருவாக்கி வருகிறார். இதற்கு சரியான தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். சினிமா காமெடி நடிகர்களுடன் சின்னத்திரை காமெடி நடிகர்களும் நடிக்கும் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.