மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
சின்னத்திரையில் வளர்ந்து வரும் தொகுப்பாளினி சவுமியா. மற்ற தொகுப்பாளினிக்கும் இவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் கையில் எப்போதும் மைக்குடன் இருப்பார்கள். இவர் மட்டும் கையில் கேமராவுடன் இருப்பார். சினிமா ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் சவுமியாவின் லட்சியம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
"என்னோட அப்பா ரகுநாத் பெரிய போட்டோகிராபர். அவர் மாதிரியே போட்டோகிராபர் ஆகணுங்கறது என்னோட சைல்டுவுட் ஆம்பிசன். விசுவல் மீடியா படிச்சப்போ இண்டன்ஷிப்புக்காக டி.வி ஸ்டேஷன்களுக்கு போனேன். அந்த வேலை, ஸ்டைல் பிடித்ததால் படிச்சு முடிச்சிட்டு தொகுப்பாளியாக வந்துட்டேன். நிறைய சீரியல்ல நடிக்க கூப்பிட்டாங்க. அதுல எனக்கு விருப்பம் இல்லை.
உலகம் முழுக்க சுற்றி நிறைய படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அதை வைத்து ஒரு கண்காட்சி நடத்தணும். போட்டோகிராபி துறையில பெண்கள் ரொம்ப குறைவு அதை மாற்றி அதுல நிறைய சாதிக்கணும். சினிமால ஒளிப்பதிவாளராகி அதுலேயும் உசரத்தை தொடணும்" என்கிறார் சவுமியா.