மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நடிகை சுவாசிகா தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‛லப்பர் பந்து' படம் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்திற்கு பிறகு சுவாசிகாவை தேடி பல பட வாய்ப்புகள் குவிகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் ராம் சரணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சுவாசிகாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாகி விடவில்லை. இப்போது எனக்கு 33 வயதுதான் ஆகிறது என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் சுவாசிகா.