எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

நடிகை சுவாசிகா தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‛லப்பர் பந்து' படம் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்திற்கு பிறகு சுவாசிகாவை தேடி பல பட வாய்ப்புகள் குவிகிறது. தமிழை தாண்டி தெலுங்கிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் ராம் சரணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சுவாசிகாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதாகி விடவில்லை. இப்போது எனக்கு 33 வயதுதான் ஆகிறது என கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் சுவாசிகா.