ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மதராஸி பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் பேசியதாவது : நானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக வளர்ந்தோம். அவரும் நானும் 3 படத்தில் இணைந்தோம். அடுத்து எதிர்நீச்சல். அப்பவே அவருக்கு நல்ல பாடல்கள் அமைந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் எஸ் கே. நாங்க இணையும் 8வது படம் மதராஸி. அதேபோல் என்னுடைய 21வயதிலேயே படம் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவருடன் இது 3வது படம். இந்த பட பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இதில் கப்பும் இருக்கிறது. பயரும் இருக்கிறது
அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரிதான் இசையமைக்கிறேன். ஒரே மாதிரி உழைப்புதான். இந்த படத்துல வேறமாதிரி நடிச்சு இருக்கிறார் சிவகார்த்திகேயன். நான் ஒரு நாள் பீல்ட் அவுட் ஆகும்போது சிவகார்த்திகேயன் உழைப்பு, வெற்றி, எங்கள் கூட்டணியை நினைச்சு பெருமைப்படுவேன். சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான எதிர்நீச்சல் எனக்கு முதல் பெரிய வெற்றி. அவர் எனக்கு செல்லம். 50 கோடி, 100 கோடி வசூல் தொடங்கி இப்ப 300 கோடிக்கு வந்திட்டாரு.
ஜன நாயகன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஜனவரியில் படம் ரிலீஸ், பாடல்கள் நன்றாக வந்துள்ளது. இது கடைசி படம் என விஜய்சார் சொல்வதால் அவரை மிஸ் பண்ணுவேன். எனக்கு இசை மீது மட்டுமே ஆர்வம், நடிப்பில் அல்ல.
இவ்வாறு அனிருத் பேசினார்.