ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் | நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா' |
பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிற டி.வி. சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்போது வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று விரைவில் வர இருக்கிறது.
இதுபற்றி அதன் நிறுவனர் வசந்தகுமார் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்கென தனி சேனல் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்தான் எனது சொந்தப் பணத்தில் இந்த சேனலை ஆரம்பித்தேன். லாபகரமாக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் நடத்தி வருகிறேன். விரைவில் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறேன்" என்கிறார் வசந்தகுமார்.