சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல செய்திவாசிப்பாளர்களான பாத்திமா பாபு மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோர் இன்று(அக்., 28ம் தேதி) அதிமுக., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். டி.வி. செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு நடிகையாக பல படங்களில் நடித்து வந்தவர் பாத்திமா பாபு. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனியார் டி.வியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று தன்னை அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
இதேபோல், தனியார் டி.வி. ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நிர்மலா பெரியசாமி. இவர் செய்தி வாசிக்கும் ஸ்டைலே மிகவும் தனியானது. அதிலும் அவர் வைக்கும் வணக்கம் ஏகபோக வரவேற்பை பெற்றது. தற்போது ஒரு தனியார் டி.வி.,யில் குடும்ப பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்த்துக் கொண்டு வருகிறார். இவரும் இன்று அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
முதல்வர் முன்னிலையில் இருவரும் அதிமுக.வில் சேர்ந்தனர். முதல்வர் ஜெயலலிதா, பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோருக்கு அதிமுக.,வின் உறுப்பினர் பதவிக்கான அட்டையை வழங்கினார்.