சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி |
பிரபல செய்திவாசிப்பாளர்களான பாத்திமா பாபு மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோர் இன்று(அக்., 28ம் தேதி) அதிமுக., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். டி.வி. செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு நடிகையாக பல படங்களில் நடித்து வந்தவர் பாத்திமா பாபு. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனியார் டி.வியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று தன்னை அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
இதேபோல், தனியார் டி.வி. ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நிர்மலா பெரியசாமி. இவர் செய்தி வாசிக்கும் ஸ்டைலே மிகவும் தனியானது. அதிலும் அவர் வைக்கும் வணக்கம் ஏகபோக வரவேற்பை பெற்றது. தற்போது ஒரு தனியார் டி.வி.,யில் குடும்ப பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்த்துக் கொண்டு வருகிறார். இவரும் இன்று அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
முதல்வர் முன்னிலையில் இருவரும் அதிமுக.வில் சேர்ந்தனர். முதல்வர் ஜெயலலிதா, பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோருக்கு அதிமுக.,வின் உறுப்பினர் பதவிக்கான அட்டையை வழங்கினார்.