சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகை சமந்தா தற்போது பெரும்பாலும் மும்பையில் தான் வசித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறைவு தான். சமீபத்தில் தான் அவரது தயாரிப்பில் உருவான சுபம் என்கிற படம் வெளியானது. இன்னொரு பக்கம் அவருக்கும் பேமிலிமேன் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நிடிமொருவுக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பையில் இருக்கும் சமந்தா ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றிருந்தார்.
இதுபோன்ற சமயங்களில் அங்கே ஜிம்மிற்கு வரும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர்கள் காத்திருப்பர். சமந்தா எப்போதுமே இது போன்ற புகைப்பட கலைஞர்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்து விட்டு செல்வார். அப்படித்தான் இந்த முறையும் ஜிம்மிலிருந்து வெளியே வந்த போது அவருக்கு ஒரு போன் வந்தது. அந்த போனை அட்டென்ட் செய்து பேசியபடியே வந்தார்.
தனது கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை கவனிக்காமல் போனில் பேசியபடி வந்தார். அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முற்பட்டனர். பின்னர் மீண்டும் ஜிம்முக்குள் நுழைந்து வேறு இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட தனது காரில் ஏறினார். அப்போதும் போட்டோகிராபர்கள் விடாமல் அவரை போட்டோ எடுக்க முயற்சித்த கடுப்பான சமந்தா, போதும் நிறுத்துங்கள் என வேகமாக காரில் ஏறி பறந்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.