நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி' என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, நாங்கள் இருவரும் ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எங்கள் பயணம் ஒரு திருப்பத்துடன் தொடர்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கண்மணி.




