இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பிரபல நடிகை ஷகிலா சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைக்கும் காட்சி குறித்து சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார். இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். கவர்ச்சி நடிகையான ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் நல்லதொரு மரியாதையை பெற்று வருகிறார். ஆனாலும் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் அண்மையில், இயக்குநர் நவீன் குமார் இயக்கிய கடைசி தோட்டா புகைப்படத்தில் வனிதா புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்து ஷகிலாவிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஷகிலா, ''வனிதாவை தெய்வமா பாக்குறீங்களா? இல்ல குடும்ப பெண்ணா பாக்குறீங்களா? இவ்வளவு நாள் வனிதாவை குடும்ப பெண்ணா பாத்தீங்களா? இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாதா?'' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நிரூபர் விஜய் சார் சிகரெட் பிடித்தாலே அதை பலரும் கண்டிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ சிகரெடி பிடிப்பதை திரைப்படத்தில் காட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்படியிருக்கையில் பெண்கள் சிகரெட் பிடித்தால் திட்டமாட்டார்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷகிலாவோ, ''திட்டினால் திட்டட்டும். அப்படியென்றால் தானே நாங்கள் பாப்புலர் ஆக முடியும்'' என பொருப்பில்லாமல் பதில் கூறியுள்ளார். ஷகிலாவின் இந்த சர்ச்சை மிகுந்த கருத்தானது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.