அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் சவுந்தர்யா அந்நிகழ்ச்சியிலேயே விஷ்ணுவிடம் லவ் புரொபோஸ் செய்தார். இதை பலரும் ஸ்கிரிப்ட் என சமூக வலைதளங்களில் எழுதி வரும் நிலையில், விஷ்ணு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதிலிருந்து, 'நானும் சவுந்தர்யாவும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னை பிடிக்கும் என நண்பர்கள் மூலம் தெரியும். எனக்கும் அவரை பிடிக்கும். நான் முதலில் புரொபோஸ் செய்தால் எதுவும் நெகட்டிவ் ஆகிவிடக் கூடாது என பயந்தேன். எனவே, ஒரு நண்பனாக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன். அதன்பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. சிலர் இதை ஸ்கிரிப்ட், டிஆர்பி என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஊரறிய ஒரு பையனிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். கொஞ்சநாள் காதலித்துவிட்டு விரைவிலேயே திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறியிருக்கிறார்.