மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' | பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் | முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' |

பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் சவுந்தர்யா அந்நிகழ்ச்சியிலேயே விஷ்ணுவிடம் லவ் புரொபோஸ் செய்தார். இதை பலரும் ஸ்கிரிப்ட் என சமூக வலைதளங்களில் எழுதி வரும் நிலையில், விஷ்ணு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதிலிருந்து, 'நானும் சவுந்தர்யாவும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னை பிடிக்கும் என நண்பர்கள் மூலம் தெரியும். எனக்கும் அவரை பிடிக்கும். நான் முதலில் புரொபோஸ் செய்தால் எதுவும் நெகட்டிவ் ஆகிவிடக் கூடாது என பயந்தேன். எனவே, ஒரு நண்பனாக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன். அதன்பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. சிலர் இதை ஸ்கிரிப்ட், டிஆர்பி என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஊரறிய ஒரு பையனிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். கொஞ்சநாள் காதலித்துவிட்டு விரைவிலேயே திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறியிருக்கிறார்.




