புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பிக்பாஸ் சீசன் 8ல் சின்னத்திரை பிரபலமான தீபக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இவருடைய கேம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில சமயங்களில் விஜய் சேதுபதியிடமே துணிச்சலாக தனது கருத்தை சொல்லிவிடுகிறார். அதேசமயம் சிலர் தீபக் பாரபட்சமாக பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் அவருடன் இணைந்து நடித்த நக்ஷத்திரா தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'தீபக் உண்மையான ஜெண்டில் மேன். மனிதர்களை சமமாக பார்ப்பவர். எல்லோரையும் அவர் சமமாக தான் நடத்துவார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் சொல்லியது கிடையாது. ஆனால், தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் இப்போது இதை கூறுகிறேன்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.