கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தார். அண்மையில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறப்பு சின்னத்திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நேத்ரனுடன் நடித்த நண்பர்களும், சில நடிகர்களும் நேத்ரனின் நல்ல குணத்தை பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேத்ரனின் மகள் அபிநயா மிக சமீபத்தில் தான் சீரியலில் நடிக்க தொடங்கியிருந்தார். அவர் தற்போது தனது அப்பாவின் பழைய புகைப்படங்களை ஷேர் செய்து எமோஷ்னலான பதிவினை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து பலரும் நேத்ரனை ஹீரோவாக பார்க்க தவறவிட்டதை துர்பாக்கியம் என கூறி வருந்தி வருகின்றனர்.