வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சின்னத்திரை பிரபலமான மைனா நந்தினி சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். அண்மையில் சொந்தமாகவே 'புள்ளத்தாச்சி' என்கிற வெப்சீரிஸை தயாரித்து தனது யூ-டியூபில் வெளியிட்டு வந்தார். இதுவரை 2 எபிசோடுகள் வரை ரிலீஸாகியுள்ள அந்த வெப்சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், புள்ளத்தாச்சி வெப்சீரிஸை கைவிடுவதாக நந்தினி - யோகேஷ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். அதற்கு காரணம் புள்ளத்தாச்சி வெப்சீரிஸுக்காக ஸ்ரீலங்கா சென்று அங்கு ஷூட்டிங் செய்துள்ளனர். ஆனால், ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள் இருந்த ஹார்ட்டிஸ்க் கீழே விழுந்து டேமேஜ் ஆனதில் மொத்த வீடியோக்களும் டெலிட் ஆகிவிட்டதாம். இந்த வீடியோக்களை ரெக்கவர் செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்றும், ஆனால், சேமிப்பு பணம் முழுவதையும் ஸ்ரீலங்கா ஷூட்டிங்கிற்கே செலவு செய்துவிட்டதால் இனி புள்ளத்தாச்சி வெப்சீரிஸை தயாரிக்க முடியாமல் கைவிடுவதாகவும் இருவரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.




