மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக நேற்று காலமானார். பல சின்னத்திரை நடிகர்களும் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், சதீஷும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 'அன்பு சகோதரன் நேத்ரன் ஆறு மாதமாக கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார். நேத்ரனை எனக்கு 22 வருடங்களாக தெரியும். இத்தனை வருடத்தில் நேத்ரன் ஒருமுறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை. மிகவும் மென்மையானவர். பக்குவமானவர். கனிவாக பேசக்கூடிய ஆத்மா. நல்லவர்களை ஆண்டவன் ஏன் இவ்வளவு சோதிக்கிறான்னு தெரியல. நேத்ரனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் வேண்டிக்குவோம்' என உருக்கமாக கூறியுள்ளார்.




