ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல சின்னத்திரை நடிகரான நேத்ரன் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக நேற்று காலமானார். பல சின்னத்திரை நடிகர்களும் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், சதீஷும் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், 'அன்பு சகோதரன் நேத்ரன் ஆறு மாதமாக கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார். நேத்ரனை எனக்கு 22 வருடங்களாக தெரியும். இத்தனை வருடத்தில் நேத்ரன் ஒருமுறை கூட கோபப்பட்டு பார்த்ததில்லை. மிகவும் மென்மையானவர். பக்குவமானவர். கனிவாக பேசக்கூடிய ஆத்மா. நல்லவர்களை ஆண்டவன் ஏன் இவ்வளவு சோதிக்கிறான்னு தெரியல. நேத்ரனுடைய ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் வேண்டிக்குவோம்' என உருக்கமாக கூறியுள்ளார்.




