வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் புதிய அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் பொறுப்பான பல விஷயங்களில் பயணித்து வருகிறார். சினிமா ஆக்டிங், பிசினஸ் என அனைத்திலும் மிகவும் பாசிட்டாவாக செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் தனது மகள் சினிமா துறைக்கு வருவதை குறித்து பேசியுள்ள வனிதா, 'ஜோவிகாவை நான் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நானே சினிமாவை விட்டு வெளியேவந்தவள் தான். நான் எப்படி அவளை அதில் தள்ளுவேன். நடிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு ஒரு தாயாக துணை நிற்பது என் கடமை என்று கூறியுள்ளார்'.
மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், 'நான் எந்த ஒரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் வாழ்கை தொடர்கிறது. புள்ளி என்றால் அது முடிவு. எனவே, மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று சொல்லமாட்டேன்' என கூறியுள்ளார்.