பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். பலவருடங்களாக திரையில் பயணித்து வரும் இவருக்கு பாக்கியலெட்சுமி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடியும், பாக்கியலெட்சுமி சீரியல் குறித்து பல அப்டேட்டுகளையும் கொடுத்து வந்த இவர் ஒரு சில முறை சீரியலை விட்டு விலகுவதாகவும், பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறி இருக்கிறார். அப்படியிருக்க, 5 வருடங்களுக்கு மேல் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலெட்சுமி தொடர் சமீபகாலங்களில் சற்று சுமாராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சதீஷ் வெளியிட்ட வீடியோவில் சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்பது போல் கூறியிருந்தார். இதனையடுத்து சீரியலுக்கு எண்ட் கார்டு என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சதீஷ் மற்றொரு வீடியோவில் தான் சொன்னதை தவறாக மக்கள் புரிந்து கொண்டதாகவும் தற்போதைக்கு சீரியல் முடிய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் 'என்னங்க இவரு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கார்' என கலாய்க்கின்றனர்.