சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே பல சர்ச்சைகள் வெடித்துவிடும். நிகழ்ச்சியை ரசித்து விமர்சிப்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து கொடி பேனர்களுடன் கூட்டமாக சிலர் போராட சென்று விடுகின்றனர். இது போன்ற போராட்டங்கள் வருடந்தோறும் வாடிக்கையானாலும் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த சீசன்களை கடந்து தான் வருகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.