3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் ஜோடியாக நடிக்க மறுத்த சந்திரகாந்தா |

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே பல சர்ச்சைகள் வெடித்துவிடும். நிகழ்ச்சியை ரசித்து விமர்சிப்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து கொடி பேனர்களுடன் கூட்டமாக சிலர் போராட சென்று விடுகின்றனர். இது போன்ற போராட்டங்கள் வருடந்தோறும் வாடிக்கையானாலும் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக அடுத்தடுத்த சீசன்களை கடந்து தான் வருகிறது.
தற்போது பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.