சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் காசு பணத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். அவரது பதிவில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். காசு, பணம், புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். இந்நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குக்காக வந்த ஒருவர் தான் குக் என்பதை மறந்துவிட்டு என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் தலையிட்டு வருகிறார். நிறைய அடக்குமுறைகளால் இந்நிகழ்ச்சி அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது. முன்பு நான் பார்த்து, ரசித்து மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவல்ல' என பல தகவல்களை கூறியிருக்கிறார். சீசன் 1 முதல் தற்போதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்றிருந்த மணிமேகலை இப்படி அதிரடியாக விலகியிருப்பதால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.