ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் காசு பணத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். அவரது பதிவில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். காசு, பணம், புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். இந்நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குக்காக வந்த ஒருவர் தான் குக் என்பதை மறந்துவிட்டு என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் தலையிட்டு வருகிறார். நிறைய அடக்குமுறைகளால் இந்நிகழ்ச்சி அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது. முன்பு நான் பார்த்து, ரசித்து மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவல்ல' என பல தகவல்களை கூறியிருக்கிறார். சீசன் 1 முதல் தற்போதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்றிருந்த மணிமேகலை இப்படி அதிரடியாக விலகியிருப்பதால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.