ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பிரபல நடிகரான பிருத்விராஜ் என்கிற பப்லு பல வருடங்களாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் ஜோடியாக பல பேட்டிகளில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிருத்விராஜ், 'நான் எப்போதும் வெளிப்படையா இருப்பேன். நீங்க கிண்டல் பண்ணுவீங்கன்னு நான் உண்மைய சொல்ல தயங்கல. நான் ஒரு விஷயத்த சொன்னா ஒரு 10 பேர் நல்ல விதமா எடுத்துக்கிறாங்க, 10 பேர் கழுவி ஊத்துவாங்க. அதனால எனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்னையை வெளிப்படையாக பேச விரும்பல. நான் நிறைய ஏமாந்துட்டேன். இப்ப சரியான பாதையில போய்ட்டு இருக்கேன். இனி என்னை மட்டுமே கவனிக்க போறேன். இனியும் திருந்தலைன்னா நான் முட்டாள்' என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.