விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

இயக்குனர் திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பின் ‛எதிர்நீச்சல்' தொடரின் மூலம் அதிரடியாக எண்ட்ரி கொடுத்தார். அந்த தொடருக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் அந்த சீரியல் நிறைவுபெற்றது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் திருச்செல்வத்திடம் எதிர்நீச்சல் பார்ட் 2 குறித்து அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். 
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எல்லோருமே எதிர்நீச்சல்-2 எதிர்பார்க்கிறார்கள். இனி அதே பெயரை வைப்பதை விட அந்த கதையோடு பொருந்துகிற மாதிரி இன்னொரு கதை உருவாகியிருக்கிறது. அதற்காக நான் பல ஊர்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீரியலுக்கான ஆயத்த பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் எதிர்நீச்சல் வீட்டுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் புது சீரியலில் அந்த வீடும் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வீட்டுக்கு இப்போதும் நான் வாடகை கொடுத்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து திருச்செல்வத்தின் அடுத்த சீரியலின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.