சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இருப்பினும் இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தொடரின் நாயகன் சமீர் அகமது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ளார்.
அப்போது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு காரணம் டிஆர்பியாக கூட இருக்கலாம். கடந்த ஷூட்டிங்கின் போதே சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. நாங்கள் மனதளவில் அதற்கு தயாராகிவிட்டோம். சில ரசிகர்கள் சீரியல் முடியப் போவதை குறித்து கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பம் வரத்தான் செய்யும். அது சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சில மாற்றம் வரும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று கூறியுள்ளார்.