ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் - பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து தற்போது நேஹா மேனன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எனக்கு கிரிக்கெட் பார்க்கக் கூட தெரியாது. யாராவது உடனிருந்தால் பார்த்தால் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் பார்த்த போது பத்திரணா குறித்து அருகில் இருந்தவர் கூறினார். அதன்பிறகு தான் பத்திரணா குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்தேன். இந்த கிசு கிசு அப்போது எனக்கு ஜாலியாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் பத்திரணாவை பார்த்தது கூட கிடையாது' என்று கூறியுள்ளார்.