நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய மாமா கார்த்திக்கிற்கும் கடந்த வாரம் கோலாகலமாக திருமணம் நடந்தது. இதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் பலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், ‛ஆரம்பத்தில் நான் எவ்வளவு வலி வேதனையோடு போராடி வெற்றி பெற்றேன். .என்னுடைய உழைப்பால் தான் நான் இன்று இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறேன். ஒரே பொண்ணு அவ கல்யாணத்தை எனக்கு பிடித்தவாறு நடத்துகிறேன். இவ்வளவு செய்கிறார்கள் ஆனால், ஒரு வருஷத்தில் பிரிந்து போய்விடுவார்கள் என்று சொல்கிறார்கள்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
அதன்பின் பேசிய ரோபோ சங்கரின் மருமகன், 'நாங்கள் உழைத்த பணத்தை வைத்து என்ஜாய் செய்கிறோம். அதில் சிலருக்கு என்ன கஷ்டம் வந்தது என்று தெரியவில்லை. சிலர் பொறாமையினால் தான் தப்பு தப்பா கமெண்ட் போடுறாங்க' என்று பேசியுள்ளார்.