சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா. இந்த சீரியலில் பள்ளி செல்லும் நாயகி தமிழ்ச்செல்விக்கு காதல் விவகாரத்தால் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அதுபோலவே தனது நிஜ வாழ்விலும் பள்ளி படிக்கும் போது பல லவ் டார்ச்சர்களை சந்தித்ததாக ஸ்வேதா கூறியுள்ளார்.
'பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் எனக்கு பேனா கொடுத்ததை பார்த்து பொறாமை பட்ட இன்னொரு பையன், நம்ம கல்யாணத்துக்கு நான் சீட்டு போட்டு வச்சுருக்கேன், நீ அவன்கிட்ட பேசுறியேன்னு கேட்டான். இன்னொருவன் பிரின்ஸிபால் ரூம் பக்கத்தில் என்னுடைய பெயரையும் அவனின் பெயரையும் எழுதி வைத்திருந்தான். அதேபோல இன்னொருவன் கையை அறுத்துக்கொண்டு வாட்சப்பில் போட்டோ அனுப்பினான்' என்று தனக்கு வந்த லவ் புரொபோஸல்கள் குறித்து அந்த பேட்டியில் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது புரொபோஸல்களையும் தெரிவித்து வருகின்றனர்.




