சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சில ரசிகர்கள் அண்மையில் லைவ்வில் வந்த பிரியங்காவிடம் நீங்கள் இப்போது சிங்கிளா? என்று கேள்வி கேட்க, அதற்கு பிரியங்கா ஆமாம் என்று கூறி தனது கணவரை பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் வர்மாவை திருமணம் செய்த பிரியங்கா, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்துள்ளார்.




