மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியிருந்தார். இதனால் சந்தேகமடைந்த சில ரசிகர்கள் அண்மையில் லைவ்வில் வந்த பிரியங்காவிடம் நீங்கள் இப்போது சிங்கிளா? என்று கேள்வி கேட்க, அதற்கு பிரியங்கா ஆமாம் என்று கூறி தனது கணவரை பிரிந்துவிட்டதை உறுதி செய்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ராகுல் வர்மாவை திருமணம் செய்த பிரியங்கா, ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தனது கணவரை விட்டு பிரிந்துள்ளார்.