கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் ஏற்கனவே விஜயகாந்த் மறைவின் போது அஞ்சலி செலுத்தியிருந்தாலும், அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழ், 'கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்வார்கள். அவருக்காக நான் என்ன செய்யலாம் என்று நினைத்தேன். எனவே, என்னுடைய ஆபிஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். இதற்காக கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்கவே இங்கு வந்தேன்' என்று கூறியுள்ளார். புகழின் இந்த செயலுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.