ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சின்னத்திரை நடிகை ரச்சிதா சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவருக்கிமிடையே நடந்த பிரச்னையில் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒருபக்கம் ரச்சிதா விவாகரத்து பெறுவதில் மும்முரமாக உள்ளார். ஆனால், தினேஷ் தன் மனைவி கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார். எனவே விவாகரத்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரச்சிதா, 'சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்' என்று பதிவிட்டு ஸ்டோரி போட்டுள்ளார்.