கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
செவ்வந்தி தொடரில் அர்ச்சனா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கவுடா நடித்து வந்தார். ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் செவ்வந்தி தொடரிலிருந்து ரம்யா கவுடா விலகிவிட, அதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் காதலர் பார்கவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்திய ரம்யா கவுடா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரம்யா கவுடாவுக்கும், பார்கவுக்கும் சக நடிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.