இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது பிரியமான தோழி தொடரில் வில்லியாக அதகளம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார். எனவே, பல பேட்டிகளிலும் தன்னை சிங்கிள் மதர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தீபா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் உலாவி வந்தது. சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷும் தீபாவும் காதலித்து வந்தனர். ஆனால், பாபுவின் வீட்டில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் தீபா தனது இன்ஸ்டாகிராமில் 'என் புருஷன்' என குறிப்பிட்டு தன் கணவர் சாய்கணேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் தீபாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.