ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது பிரியமான தோழி தொடரில் வில்லியாக அதகளம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார். எனவே, பல பேட்டிகளிலும் தன்னை சிங்கிள் மதர் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தீபா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் உலாவி வந்தது. சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷும் தீபாவும் காதலித்து வந்தனர். ஆனால், பாபுவின் வீட்டில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் தீபா தனது இன்ஸ்டாகிராமில் 'என் புருஷன்' என குறிப்பிட்டு தன் கணவர் சாய்கணேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் தீபாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.




