பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலெட்சுமி தொடர்ந்து சில படங்களில் நடித்து சின்னத்திரை பக்கம் வந்தார். நாயகி, டும் டும் டும் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்துடன் 1 கோடி ரூபாய் வென்றார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயலெட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் 'நடிகர்கள் எதை சொன்னாலும் நடிகைகள் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள். என்னிடமும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால், நான் ஏற்கவில்லை' என்று தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.