நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராமில், 'டப்பிங் தான் முக்கியம். உங்கள் நடிப்பு உங்களுடைய குரலில்லாமல் முழுமை அடையாது' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒருவர் 'தயவுசெய்து இந்த சீரியலை முடிச்சிடுங்க. முடியல' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.
இதற்கு ஸ்ரீகுமார், 'ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்' என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.