மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராமில், 'டப்பிங் தான் முக்கியம். உங்கள் நடிப்பு உங்களுடைய குரலில்லாமல் முழுமை அடையாது' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒருவர் 'தயவுசெய்து இந்த சீரியலை முடிச்சிடுங்க. முடியல' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.
இதற்கு ஸ்ரீகுமார், 'ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்' என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.