கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பல வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராமில், 'டப்பிங் தான் முக்கியம். உங்கள் நடிப்பு உங்களுடைய குரலில்லாமல் முழுமை அடையாது' என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒருவர் 'தயவுசெய்து இந்த சீரியலை முடிச்சிடுங்க. முடியல' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.
இதற்கு ஸ்ரீகுமார், 'ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்' என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.