25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் தான் மாரடைப்பால் இறந்தார். திருமணமான ஒரு வருடத்திற்குள் ஸ்ருதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய அவர், சோஷியல் மீடியா பக்கத்தில், 'கனத்த இதயத்துடனும் பல நினைவுகளுடன் நீ இல்லாமல் முதல் முறையாக சென்னையை விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உன்னையும் நினைவுகளையும் என் இதயத்தில் என்றென்றும் அழைத்து செல்வேன். இனிவரும் காலங்களில் இதையே செய்வேன்' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி சண்முகப்பிரியாவின் இந்த நிலையை கண்டும் வருந்தும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.