தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பாடகர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்ற போது அங்கு ஈஸ்வர் சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டியதுடன், என்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளதாக கூறினார். எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்க உயிர் பயத்தை காட்டும் அளவுக்கு என்னை ஏன் மிரட்டினார் என்று தெரியவில்லை. எனவே, அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.
மேலும், வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வருவதால் தனக்கு தக்க பாதுகாப்பு வேண்டியும் போலீஸிடம் கிருஷ்ணா வேண்டுகோள் வைத்துள்ளார்.