அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சின்னத்திரை நடிகையான நக்ஷத்திரா 'யாரடி நீ மோகினி', 'வள்ளித் திருமணம்' ஆகிய சீரியல்களின் மூலம் பிரபலமானார். கடந்த வருடம் ஜூலை மாதத்தில் காதலர் விஸ்வாவை கரம்பிடித்த நக்ஷத்திராவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. அடுத்த சில மாதங்களிலேயே கருவுற்ற நக்ஷத்திராவுக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்வும் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நக்ஷத்திரா குழந்தையின் பிஞ்சு விரல்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை நக்ஷத்திராவுக்கு தெரிவித்து வருகின்றனர்.