'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” | புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாகிறது. இதனை கொண்டாடும் வகையிலும், சங்கத்திற்கு நிதி திரட்டவும் 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வருகிற 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இந்த விழாவில் திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சி கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் நடத்துகிறார். இசை நிகழ்ச்சிகளை பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடத்துகிறார். வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை சண்டை பயிற்சியாளர்கள் பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர் நடத்துகிறார்கள்.
நகைச்சுவை நிகழ்ச்சிகளை திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர். தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்குபெற்று வித்தியாசமான நிகழ்ச்சி நடக்கிறது. திரைப்படம் மற்றும் சின்னத்திரை பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம் பெறுகிறது. பிரபல கலைஞர்கள் நடத்திக் காட்டும் பல குரல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெறும்.
திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையில் சாதனைகள் நிகழ்த்திய சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.