பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு |

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து 'சிடி 23' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தி கொண்டாட இருக்கிறார்கள். வருகிற ஜூன் 11ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் இந்த விழாவை 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தளபதி கூறும்போது “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திரைப்பட மற்றும் சின்னத்திரை துறைகளை சார்ந்த கலைஞர்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெறும்.
ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் செய்தி, மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை நேரில் சந்தித்து விழாவுக்கு அழைக்க இருக்கிறோம்” என்றார்.




