இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இனிமையான குரலின் மூலம் பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ரக்ஷிதா தற்போது சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தவிரவும் உள்நாட்டு, வெளிநாட்டு மேடை கச்சேரிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். மலேசியா ஏர்போர்ட்டுக்கு ரக்ஷிதாவும் குழுவினரும் காரில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென சாலையோர டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா 'நடந்த விசயத்தை நினைத்தால் உடல் நடுங்குகிறது. உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். ஏர்பேக்குகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.