பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ். இனிமையான குரலின் மூலம் பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ரக்ஷிதா தற்போது சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தவிரவும் உள்நாட்டு, வெளிநாட்டு மேடை கச்சேரிகளிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் கார் விபத்தில் சிக்கியுள்ளார். மலேசியா ஏர்போர்ட்டுக்கு ரக்ஷிதாவும் குழுவினரும் காரில் வந்து கொண்டிருந்த போது, கார் திடீரென சாலையோர டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ரக்ஷிதா 'நடந்த விசயத்தை நினைத்தால் உடல் நடுங்குகிறது. உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம். ஏர்பேக்குகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரக்ஷிதாவின் ரசிகர்கள் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்து வருகின்றனர்.