காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
எதிர்நீச்சல் தொடரில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த வகையில் வில்லன் குணசேகரனுக்கு எதிர் வில்லனாக எஸ்.கே.ஆர் என்ற கதாபாத்திரமும் கெத்தாக வலம் வருகிறது. குணசேகரனை போல் பக்கம் பக்கமாக டயலாக் பேசாவிட்டாலும் கெத்தான உடல் மொழியினாலேயே சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி வருகிறார் எஸ்.கே.ஆர். இந்த எஸ்கேஆர் யார்? இதற்கு முன்னால் இவரை சீரியலிலோ, சினிமாவிலோ பார்த்ததில்லையே என ரசிகர்கள் பலரும் ஆச்சரியமாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்நீச்சல் எஸ்கேஆரின் உண்மையான பெயர் வாசுதேவன். கேராளாவை சேர்ந்த இவர் நிஜத்திலும் பெரிய பிசினஸ் மேன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் வாசுதேவனுக்கு நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. இதற்கிடையில் இயக்குநர் திருச்செல்வத்தின் அறிமுகம் கிடைக்க, தனது சீரியலுக்கு உங்களை போல் கதாபாத்திரம் வேண்டும் என்று வாசுதேவனிடம் கேட்டுள்ளார். வாசுதேவனும் தனது நடிக்கும் ஆர்வத்தை குறித்து திருசெல்வத்திடம் கூற, எஸ்கேஆர் கதாபாத்திரத்தில் கமிட்டாகி கலக்கி வருகிறார்.
எஸ்கேஆர் கதாபாத்திரத்தில் வாசுதேவனின் எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ள நிலையில் தமிழ் திரையுலகத்துக்கு நல்லதொரு குணச்சித்திர நடிகர் கிடைத்துவிட்டதாக பலரும் வாசுதேவனை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.