சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார எபிசோடில் கங்கை அமரனும் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். அந்த எபிசோடில், போட்டியாளரை அழைக்க பாடல் போடும் போது கங்கை அமரன் இசையமைத்த 'வந்தனம் என் வந்தனம்' என்ற பாடல் இசைக்கப்படுகிறது. இதை மாகாபாவும் குரேஷியும் வந்தனம் சைதாபேட்டை நந்தனம் என மாறி மாறி கலாய்க்க, கோபமடைந்த கங்கை அமரன் எனக்கு இது சரிபட்டு வராது என்று கூறி ஆத்திரத்துடன் மேடையை விட்டு எழுகிறார். இந்த வீடியோவானது தற்போது புரோமோவாக ரிலீஸாகியுள்ளது. இதைபார்க்கும் பலரும் கங்கை அமரன் போன்ற லெஜண்ட்டுகளையும் டிஆர்பிக்காக அசிங்கப்படுத்துவதா? என விஜய் டிவியை விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் இது பிராங்க்காக கூட இருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகின்றனர்.