சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? | எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' | பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா | மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன் | 'சாரக்' படத்திற்கு தணிக்கை சான்று மறுப்பு | ஏ படத்திற்கு 45 இடத்தில் கட் |

எதிர்நீச்சல் தொடரில் நடிகை தேவயானி என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல் தொடரில் ஏற்கனவே பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் அப்பத்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பம்பாய் ஞானத்துடன் நடிகை தேவயானி நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து தேவயானி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார் என பலரும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக நடிகை ஜெயஸ்ரீயை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டு வந்தது போல் தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கலாம் அல்லது அப்பத்தா கதாபாத்திரம் தற்போது கோமா நிலைக்குச் சென்று ஹாஸ்பிட்டலில் இருப்பதால், ஒருவேளை கதையில் சில மாற்றத்தை கொண்டு வர தேவயானி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் பலவாறாக யூகித்து வருகின்றனர். எனினும், இந்த செய்தி குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.