பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
சின்னத்திரையில் சீரியல்களில் ஒரு காலத்தில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்த பிரஜின் பத்மநாபன் தற்போது வெள்ளித்திரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து சில எபிசோடுகளுடன் விலகிவிட்டார். பிரஜின் நடிப்பில் டி-3 திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் 'ஹையானா', 'நினைவெல்லாம் நீயடா' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா என்ட்ரிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் வரமாட்டார் என பிரஜினின் ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்கிற தொடரில் பிரஜின் கடவுள் முருகனாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புரோமோவை பார்க்கும் போது சீடன் படத்தில் தனுஷின் சரவணன் கதாபாத்திரத்தை காப்பி அடித்திருப்பது போல் உள்ளது.