மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் ஜி.பி.முத்து. பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்து இருந்த காலக்கட்டம் வரையிலும் அவர் மட்டுமே தான் பேசுபொருளாக இருந்து வந்தார். அந்த அளவிற்கு அவரது எதார்த்தமான குணம் மக்களை ரசிக்க வைத்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் இன்றளவும் ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பிக்பாஸை காட்டிலும் சூப்பர்ஹிட் ஷோவான குக் வித் கோமாளியில் ஜி.பி.முத்து தற்போது எண்ட்ரியாகி உள்ளார்.
முதல் மூன்று சீசன்களின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமோவும் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நடுவர்களான வெங்கடேஷ் பட், தாமுவுடன் ரக்சன், மணிமேகலை, சுனிதா மற்றும் ஜி.பி. முத்து ஆகியோர் ஜாலியாக நடனமாடுகின்றனர். இதில் ஜி.பி.முத்துவின் எண்ட்ரி தான் ஹைலைட். ஜி.பி.முத்துவின் இந்த ரீ-எண்ட்ரிக்கு நேயர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.




