நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக 86 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கடந்தவார எவிக்சனில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார். 4 முறை கேப்டனாகவும், கேம்களில் சிறப்பாகவும் விளையாடி வந்த மணிகண்டன், இந்த வாரம் நடைபெற்று வரும் 'டிக்கெட் டூ பினாலே' டாஸ்க்கிலும் நிச்சயம் ஜெயித்து பைனல் வரை செல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் பயணம் மறக்க முடியாதது. என்றும் என் நினைவில் இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த பிக்பாஸ் குழு, ஸ்டார் விஜய், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது விலைமதிப்பற்ற அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்திருக்கிறது. அதிக உயரத்தை அடைய என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்' என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனின் எதிர்காலம் சிறப்பாக அமைய ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.