ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'கயல்' தொடர் மக்களுக்கு பேவரைட்டான சீரியலாக புகழ் பெற்றுள்ளது. இந்த தொடரில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் கயல் தொடரை விட்டு நாயகன் சஞ்சீவ் கார்த்திக் விலகவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இதுகுறித்து சஞ்சீவிடமே பலரும் கேட்க, சஞ்சீவும் ஊடகத்தில் வெளியான அந்த செய்தியை தனது ஸ்டோரியில் பகிர்ந்து 'இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று ரசிகர்களிடமே கேள்வி கேட்டிருந்தார். இருப்பினும், சீரியலை விட்டு விலகுவது குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை. இதன்காரணமாக சஞ்சீவியின் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் காத்திருக்கின்றனர்.