சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா. சிறந்த வில்லிக்கான சிறப்பு விருதையும் தட்டிச் சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகினார். வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அப்போது தெரிவித்திருந்தார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகிவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனாலும், அர்ச்சனா என்ன செய்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது போட்டோஷூட் மட்டுமே நடத்தி வந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவர் நடிப்பில் 'தம்மா துண்டு' என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த அர்ச்சனா தற்போது அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் என்னவள்' என்கிற வலைதொடரும் விரைவில் வெளியாகவுள்ளது. இவ்வாறாக இந்த புத்தாண்டின் தொடக்கமே அர்ச்சனாவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




