நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று புதினத்தை மணிரத்னம் திரையில் கொண்டு வந்தார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, பெரிய வரவேற்பையும், வசூலையும் குவித்தது. தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்புகிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், லால், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.