தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த தாய் முத்துசெல்வம் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூட்டனின் மூன்றாம் விதி', உதயா நடித்த 'ஆவிகுமார்' ஆகிய படங்களை இயக்கியவர் தாய் முத்துசெல்வம். சினிமா கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார்.
'கல்யாணம் முதல் காதல்வரை' 'மெளன ராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களை கொடுத்து சின்னத்திரையில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது அவர் இயக்கி வரும் 'ஈரமான ரோஜாவே 2' தொடரும் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் முத்துசெல்வம், நுரையீரலில் ஏற்பட்டு தொற்றுக்காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் முத்துசெல்வத்தின் மரணத்தால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.