ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த தாய் முத்துசெல்வம் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூட்டனின் மூன்றாம் விதி', உதயா நடித்த 'ஆவிகுமார்' ஆகிய படங்களை இயக்கியவர் தாய் முத்துசெல்வம். சினிமா கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார்.
'கல்யாணம் முதல் காதல்வரை' 'மெளன ராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களை கொடுத்து சின்னத்திரையில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது அவர் இயக்கி வரும் 'ஈரமான ரோஜாவே 2' தொடரும் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் முத்துசெல்வம், நுரையீரலில் ஏற்பட்டு தொற்றுக்காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் முத்துசெல்வத்தின் மரணத்தால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.