ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த தாய் முத்துசெல்வம் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூட்டனின் மூன்றாம் விதி', உதயா நடித்த 'ஆவிகுமார்' ஆகிய படங்களை இயக்கியவர் தாய் முத்துசெல்வம். சினிமா கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார்.
'கல்யாணம் முதல் காதல்வரை' 'மெளன ராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களை கொடுத்து சின்னத்திரையில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது அவர் இயக்கி வரும் 'ஈரமான ரோஜாவே 2' தொடரும் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் முத்துசெல்வம், நுரையீரலில் ஏற்பட்டு தொற்றுக்காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் முத்துசெல்வத்தின் மரணத்தால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.




