‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரையில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வந்த தாய் முத்துசெல்வம் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூட்டனின் மூன்றாம் விதி', உதயா நடித்த 'ஆவிகுமார்' ஆகிய படங்களை இயக்கியவர் தாய் முத்துசெல்வம். சினிமா கைக்கொடுக்காத நிலையில் சின்னத்திரையில் நுழைந்தார்.
'கல்யாணம் முதல் காதல்வரை' 'மெளன ராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' என பல ஹிட் சீரியல்களை கொடுத்து சின்னத்திரையில் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது அவர் இயக்கி வரும் 'ஈரமான ரோஜாவே 2' தொடரும் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
தாய் முத்துசெல்வம், நுரையீரலில் ஏற்பட்டு தொற்றுக்காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய் முத்துசெல்வத்தின் மரணத்தால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் உட்பட பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.